Friday, March 29, 2013

பள்ளி ஆண்டு விழாவில் திருச்சி மேயர் பங்கேற்பு



திருச்சி:
Finamalar 27/2-2013
பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மேயர் ஜெயா, நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் அலீம் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்.
திருச்சி புத்தூரில் பாத்திமா உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 90வது ஆண்டு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் அலீம், திருச்சி மேயர் ஜெயா, திருச்சி நகர உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின், 51வது வார்டு கவுன்சிலர் கல்பனா, பள்ளியின் புரவலர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பள்ளியின் ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, டாக்டர் அலீம், மேயர் ஜெயா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் பேசிய மேயர் ஜெயா, தான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவி என்பதை நினைவு கூர்ந்தார். விழா நிறைவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment