Sunday, November 6, 2011

கி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா

கி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா

First Published : 03 Jul 2011 04:28:13 PM IST

திருச்சி, ஜூலை 2: திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் "ரோபஸ்ட் 2011' என்கிற விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதன்மையர் ஏ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் எம். சந்திரசேகரன், துணைக் கண்காணிப்பாளர் எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி விளையாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான் செல்வக்குமார் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஜே. ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பி. மனோகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். இதில், ஒட்டுமொத்தப் புள்ளிகள் அடிப்படையில் "வொயிட் ஈகிள்' அணி முதலிடத்துக்கான பரிசையும், "யெல்லோ தண்டர் பேர்ட்ஸ்' அணி இரண்டாமிடத்துக்கான பரிசையும் பெற்றன. மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் எல். பாபு வரவேற்றார். சி.எல். கோகிலா பிரீத்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment